×

மரங்களை பாதுகாக்க வேண்டும்: மரங்களை காயப்படுத்தாதீர்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் பல்வேறு மரங்கள் நடப்பட்டு மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இம்மரங்கள் அனைத்தும் நல்ல முறையில் வளர வளமான மண், தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை முக்கிய காரணி ஆகும். எனிலும், இயற்கைக்கு மாறாக மரங்களில் எவ்வித சேதாரமின்றி பாதுகாக்கப்பட வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.

இந்நிலையில் சில தனியார்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நிறுவன விளம்பரங்களை அட்டை மற்றும் பலகைகள் போன்ற  தேவையற்ற பொருட்கள் மூலம் மரங்களில் ஆணி அடித்து மற்றும் கயிற்றால் கட்டி விளம்பரம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மரங்களில் வண்ணம் பூசுவதுடன் மின்சார அலங்கார விளக்குகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் மற்றும் இதர பொருட்களை பொருத்துவதால் மரங்கள் பட்டுபோய் வாழ்நாள் குறையும் என்று சுட்டிக்காட்ட பட்டுள்ளது.

மரங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற பொருட்களை சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் 10 நாட்களுக்கு அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தவறினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 ஆம் ஆண்டு 326(ஐ) பிரிவின்படி ரூ.25 ஆயிரம் வரை அதிகபட்சமாக அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகார்களை 1913 என்ற இலவச தொலைபேசி என் வாயிலாக பொதுமக்கள் தெரிவிக்குமாறு மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.


Tags : Madras Corporation , Trees, Protect, Have, Chennai Corporation, Warning
× RELATED சென்னை மாநகராட்சி, குடிநீர்...