×

மல்லிப்பட்டினம் அருகே மாயமான 4 மீனவர்களில் இரண்டு பேர் உடல் மீட்பு

சேதுபாவாசத்திரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நடராஜபுரத்தை சேர்ந்த முனியசாமி (47), ரஞ்சித்குமார் (23), மதன்(25), இளங்கேஸ்வரன்(20), தரக்குடியான்(25), காந்திக்குமார்(23), செந்தில்குமார் (31), முனீஸ்வரன்(24), உமாகாந்த்(19),  காளிதாஸ்(29) ஆகிய 10 பேரும் கடந்த 2 ம்தேதி கடலூர் சென்று புதிய பைபர்படகை (போட்டியா படகு) வாங்கி கொண்டு மறுநாள் 3 ம்தேதி ராமேஸ்வரம் திரும்பி சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் பகுதியில் பகல் 3  மணியளவில் சென்று கொண்டிருந்த போது சூறாவளி காற்றால் படகு கவிழ்ந்தது. மீனவர்களும் படகில் இருந்த கேன், ஐஸ்பெட்டி உள்ளிட்ட பொருட்களை பிடித்துக் கொண்டு தத்தளித்தனர். இவர்களில் காளிதாஸ், செந்தில்குமார் ஆகியோரை  மல்லிபட்டினம் மீனவர்கள் மீட்டனர்.
தகவலின்பேரில், முனியசாமி, தரக்குடியான், முனீஸ்வரன், ரஞ்சித்குமார் ஆகிய நான்கு பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். மற்ற 4 பேரை தொடர்ந்து தேடி வந்தனர்.  5-வது நாளாக நேற்று முத்துப்பேட்டையில் 2 பேர் சடலங்களை  மீட்டனர். மேலும் 2 மீனவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Two ,fishermen ,Mallipatnam , Mallipatnam,magical,two people
× RELATED கோயில் திருவிழாவில் இரு...