×

விசாரணைக்கு சென்ற இடத்தில் தகராறு எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற போலீஸ் சஸ்பெண்ட்

மதுரை: மதுரையில் புகாரை விசாரிக்க, போதையில் வந்த போலீஸ்காரரை எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி புரிபவர் ராமு. ஒரு புகார் மனு ெதாடர்பாக, மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அழகேசன், அவரது மனைவி லட்சுமி ஆகியோரிடம் விசாரணை  நடத்துவதற்காக நேற்று முன்தினம் ஒத்தக்கடைக்கு ராமு வந்தார். குடிபோதையில் இருந்த ராமு, 2 பேரிடமும் விசாரணை என்ற பெயரில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில்அழகேசன் புகார் அளித்தார்.  இதனடிப்படையில் ராமுவை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார், விசாரிக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த ராமு, அங்கிருந்த தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐ முத்துகிருஷ்ணனை தாக்க முயன்றதாகவும், அவரை சக போலீசார்  தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி எஸ்பி மணிவண்ணனிடம் சிறப்பு எஸ்ஐ முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார்.  இதைத்தொடர்ந்து ராமுவை சஸ்பெண்ட் செய்து, எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார்.

Tags : dispute ,interrogation ,SSI , Dispute, Police ,trying , attack SSI
× RELATED எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற ரவுடி கைது