×

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காதலியின் வீட்டு முன்பு வாலிபர் தீக்குளித்து சாவு

சென்னை: வடபழனியை சேர்ந்தவர் மொய்தீன் (27), பட்டதாரி. நந்தனத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் எர்ணாவூரை சேர்ந்த ராணி  (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  என்பவரும் காதலித்து வந்தனர். இதுபற்றி அறிந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ராணியை வேலைக்கு அனுப்பாமல் வீட்டு சிறையில் வைத்துள்ளனர். இந்நிலையில், மொய்தீன் நேற்று முன்தினம்  மாலை ராணி வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோரிடம் பேச முயன்றுள்ளார். ஆனால் அவர்கள், பேச மறுத்து,  விரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மொய்தீன்,  தான் கொண்டுவந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி  நேற்று காலை இறந்தார்.

— கோயம்பேடு சின்மயா நகர்,  வேதபாடசாலை தெருவை சேர்ந்த பிரியங்கா  (29) என்பவருக்கு நாளை (9ம் தேதி) திருமண நிச்சயதார்த்தம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். ஆனால், இதில் விருப்பம் இல்லாத பிரியங்கா நேற்று முன்தினம்  இரவு தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார்.— விருகம்பாக்கம் என்எஸ்கே சாலையை சேர்ந்த இக்பால் (23) என்பவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக காதலி இவரை பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த இக்பால், நேற்று  முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : anti-lover ,home ,lover , Parental , love,girlfriend,fire
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...