×

ஈநோவா டென்னிஸ் போட்டி தக்ஷ்னேஸ்வர்-பிரித்வி சாம்பியன்

சென்னை: பெருங்குடி  கிருஷ்ணன்  டென்னிஸ் மையத்தில், ஆண்களுக்கான ஈநோவா ஐசொல்யூஷன்ஸ்  டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இரட்டையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில் தக்ஷ்னேஸ்வர்/பிரித்வி சேகர் இணை 6-1, 6-2 என்ற நேர் செட்களில், கிரண் அருணாச்சலம் /சித்தார்த் ரெட்டி இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.மற்றொரு அரையிறுதியில் முகமது பஹத்/இஷான் உசைன்  இணை  6-2, 3-6, 13-11 என்ற செட்களில்  தீபக் செந்தில்/யஷ்வந்த் லோகநாதன் இணையைப் போராடி வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பைனலில் தக்ஷ்னேஸ்வர்/பிரித்வி சேகர் இணை, முகமது பஹத்/ இஷான் உசைன் இணையுடன் மோதியது. தக்ஷ்னேஸ்வர்/பிரித்வி சேகர் இணை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.



Tags : Tournament ,Dakshineswar-Prithvi Champion ,Inova Tennis , Dakshineswar-Prithvi,Champion ,Inova Tennis, Tournament
× RELATED அல்போன்சா கல்லூரியில் தென்தமிழக அளவிலான கைப்பந்து போட்டி