×

நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை : தமிழ்நாடு காங்கிரஸ்

நெல்லை : நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தன்னிச்சையாக சில தீர்மான நகல்களை கூட்டத்திற்கு முன்பாக வெளியிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து கூறிய கருத்து பற்றி விளக்கம் தர தமிழ்நாடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.




Tags : contest ,constituency ,Nankuneri ,Tamil Nadu ,Congress , : Nankuneri, Resolution, Tamil Nadu Congress
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி