×

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் விமானம், பாகிஸ்தான் வான் எல்லை வழியாக செல்ல அனுமதி மறுப்பு

டெல்லி : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்.9 அரசு முறை பயணமாக ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து செல்லவுள்ள விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கேட்ட நிலையில்,பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளதாக பாக். அமைச்சர் குரேஷி தகவல் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத், சுவிட்சர்லாந்து பயணத்தின்போது பாக். வான்வெளியை பயன்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சரின் கருத்தை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Ramnath Govind ,flight ,airspace ,Pakistani , President, Ramnath Govind, Pakistan, Aviation, Permission, Denial
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...