புதுச்சேரி : புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் கோரிக்கையை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து கிரண்பேடியை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்ற தீர்மானத்தை கிரண்பேடி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கிரண்பேடியின் நிராகரிப்பு குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் நாராயணசாமி கூறினார்.