×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, ராயப்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, வானகரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கியதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சை, கோவை, தேனி, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags : Thundershowers ,Puducherry ,Tamil Nadu , Rain, Puducherry, Tamil Nadu
× RELATED புதுச்சேரியில் ஓடும்...