×

படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை 4 நாட்களாக தேடல் தீவிரம்

சேதுபாவாசத்திரம்: கடலூரில் புதிய படகு வாங்கிக் கொண்டு ராமேஸ்வரம் திரும்பும் வழியில் புதுகை மாவட்ட  கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் படகு கவிழ்ந்தது. இதில், படகில் இருந்த மீனவர்கள் 10 பேரும் மாயமாகினர்.  அவர்களில் 2 பேரை தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீட்டு  மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.  பின்னர், அப்போது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை டீசல் கேனை பிடித்து கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேர் மீட்கப்பட்டனர்.மற்ற 4 மீனவர்களை தேடியும் கிடைக்கவில்லை. மீண்டும் நேற்று காலை கடலோர காவல்படையினர், மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் சென்று தேடி வருகின்றனர்.

Tags : search ,fishermen , Boat topples , 4 days , search for magical fishermen
× RELATED கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டி...