×

ரவுடிக்கு அரிவாள் வெட்டு

கீழ்ப்பாக்கம்: சென்னை ஓட்டேரி சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர் சத்யா (23), ரவுடி. இவரது நண்பர்கள் அதே பகுதி கன்னிகாபுரத்தை சேர்ந்த ரீகன் (எ) சந்தோஷ்குமார் (25), ஓம் ஓசைமணி (23), மாதவரத்தை சேர்ந்த ஹரிஷ் (22). இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மாமூல் வசூலிப்பது தொடர்பாக சத்யாவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதமாக மாறியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி சந்தியப்பன் தெருவில்  சத்யா நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ரீகன், ஓசைமணி, ஹரிஷ் ஆகிய மூவரும், அரிவாளால் சத்யாவை வெட்டி விட்டு தப்பினர்.  படுகாயமடைந்த  சத்யாவை போலீசார் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

Tags : Rowdy , Rowdy, sickle cut
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...