×

வங்கியில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் 33 ஆயிரம் மோசடி

சென்னை: வங்கியில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் 33 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அக்ரகாரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் நவீன் (21). பி.காம் பட்டதாரியான இவர் அரசு வேலை தேடி வந்தார். நண்பர்கள் மூலம் மோகன் (56) என்பவர் அறிமுகமானார். அவர் சென்னை பாரிமுனையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். இதற்காக, நவீனிடம் 33 ஆயிரம் பணத்தை அண்ணாசாலை காமராஜர் அரங்கம் எதிரே உள்ள லிப்ரா கட்டிடம் முன்பு கடந்த 5ம் தேதி மோகன் வாங்கி உள்ளார்.

அதன் பிறகு மோகனை தொடர்புகொள்ள முடியவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த நவீன் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் மோசடி செய்த மோகன் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : bank , Bank job, graduate, fraud
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...