×

மாடு மேய்க்க சென்றபோது கழுத்தை அறுத்து பெண் படுகொலை: போலீசார் விசாரணை

சென்னை:  ஏரிக்கரையில் மாடு மேய்த்து கொண்டிருந்த பெண், கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே காவித்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். விவசாயி. இவரது மனைவி கோமதி (37). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களது வீட்டில் சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகின்றனர். அந்த மாடுகளை காலை, மாலை வேளையில் கோமதி அதே பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், நேற்றுமுன் தினம் மாலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற கோமதி, இரவு 9 மணியாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் அவரை தேடினர். அப்போது, கிராமத்தில் உள்ள  வரத்து கால்வாய் அருகே கோமதி, கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில், சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன் விரோதம் காரணமாக கோமதி கொலை செய்யப்பட்டாரா, தொழில் போட்டியா, சொத்து தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.



Tags : Police investigation , Cow, woman, slaughter, police investigate
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை