×

கேரள கவர்னராக ஆரிப் பதவியேற்பு

திருவனந்தபுரம்: கேரளா,  தெலங்கானா உள்பட 5 மாநில கவர்னர்களின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து, சமீபத்தில் புதிய கவர்னர்களை மத்திய அரசு  நியமித்தது. கேரள கவர்னராக இருந்த சதாசிவத்திற்கு பதிலாக முன்னாள்  மத்திய அமைச்சர் ஆரிப் முகமதுகான் நியமிக்கப்பட்டார். நேற்று காலை அவர் கேரள கவர்னராக பதவியேற்றார். திருவனந்தபுரம் கவர்னர் மாளிகையில் உள்ள அரங்கில் பதிவியேற்பு  விழா நடந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் பதவி பிரமாணம்  செய்து வைத்தார். முதலில் மலையாளத்திலும் பின்னர் ஆங்கிலத்திலும் கடவுளின் பெயரில் அவர் உறுதிமாழி ஏற்றுக் கொண்டார். விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயன்,  அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்  ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


Tags : Arif ,governor ,Kerala , Sworn ,Arif, Governor of Kerala
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...