×

டெல்லியில் இருந்து புறப்பட்ட சண்டிகர்-கொச்சுவேலி எக்ஸ்பிரசில் தீ விபத்து

புதுடெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்ட சண்டிகர் - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.  சண்டிகரில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு டெல்லி ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு 8வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட அந்த ரயிலின் பின்பகுதியில் ரயிலில் உள்ள மின் சாதனங்களுக்கு மின்சப்ளை செய்யும், ‘பவர் கார் பெட்டி’யில் திடீரென தீப்பற்றியது. இதை பார்த்த பயணிகள், டெல்லி ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ரயிலும் நிறுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து 12 தீயணைப்பு வாகனங்களில்  வந்த தீயணைப்பு வீரர்கள்,  ரயிலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பியதாக வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.


Tags : Delhi ,Chandigarh-Kochuveli Express , Delhi, Chandigarh, Kochuveli, fire
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...