பெங்களூரு : சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் இறங்குவதை காண பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு சென்றடைந்தார். இதற்காக பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.