சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் தொகுதி எம்.பி். ஜெயக்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.