×

காங்கிரஸ் தொண்டருக்கு பளார்விட்ட சித்தராமையா

மைசூரு: மைசூருவில் காங்கிரஸ் தொண்டர் கன்னத்தில் சித்தராமையா பளார் என்று  அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.கே.சிவகுமார் கைதை  கண்டித்து மைசூருவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர்  சித்தராமையா விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவரது ஆதரவாளரும்,  மாஜி பஞ்சாயத்து உறுப்பினருமான ரவி அவரை வரவேற்று போராட்டத்துக்கு அழைப்பு  விடுத்தார்.
ஆனால், போராட்டத்தில் பங்கேற்க நான் வரவில்லை. நீங்களே  போராட்டம் நடத்தி கொள்ளுங்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

அதற்குள்   காங்கிரஸ் பிரமுகர் மரிகவுடா போனில் ரவியை தொடர்புக் கொண்டு, ‘‘சித்தராமையாவை  நான் போராட்டத்துக்கு அழைக்கிறேன் அவரிடம் போனை கொடு’’ என்று கூறியுள்ளார்.  அவர் கூறியபடியே ரவி, சித்தராமையாவிடம் போனை கொடுக்க சென்றபோது  எரிச்சலடைந்த சித்தராமையா, அவரது கன்னத்தில் பளார் என்று அழைவிட்டார். இந்த பிரச்னை சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், ‘பளார்’ வாங்கிய ரவியிடம் பஞ்சாயத்து பேசி சமரசம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Siddaramaiah, beat , Congress volunteer
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...