×

மாகரலில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 ஆடுகள் உயிரிழப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மாகரலில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 ஆடுகள் உயிரிழந்தன. கல்குவாரியில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் எதிர்பாராத விதமாக வெடித்ததில் படுகாயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடிவிபத்தில் இடிந்து விழுந்த மேற்கூரையின் இடிபாடுகளில் மற்றொரு தொழிலாளி சிக்கியுள்ளாரா என தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வெடிவிபத்தை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கல்குவாரியில் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : 20 deaths, deaths, district police superintendent, investigation
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...