சென்னை: சென்னை அண்ணா நகரில் சாலையில் திடீரென 15 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா நகர் சாந்தி காலனியில் திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தகவல் அறிந்து வந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத பள்ளத்தை மூடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.