ஆலந்தூர்: கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க சென்ற எழும்பூரை சேர்ந்த ரமேஷ் ஜெய்துலானி, (72), போயஸ்கார்டனை சேர்ந்த மிர்துன் ஜெயசிங் (75) இருவரும், எஸ்கலேட்டரில் தவறி விழுந்தனர். இதில் ரமேஷ் ஜெய்துலானி இறந்தார்.