×

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவையொட்டி குடியேற்றத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். கீழ்திசை நாடுகளின் புனித லூர்ந்து நகரம் என்று அழைக்கப்படும்  வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா , ஆண்டுதோறும் ஆகஸ்ட்-29-ம் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

முன்னதாக புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியானது, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலகமாக எடுத்து வரப்பட்டு, புனிதம் செய்து சிறப்பு திருப்பள்ளிக்கு பின்னர் ஆலய கொடிமரத்தில் ஏற்றப்பட உள்ளது. விழா தொடங்கியதும் நாள்தோறும் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த பெருவிழா வருகின்ற செப்டம்பர்-8 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், கூட்டுபாத திருப்பள்ளி நற்கருணை ஆசீர் என சிறப்பு நிகழ்ச்சிகள் தமிழ் , மலையாளம் , தெலுங்கு என பல மொழிகளில் நடத்தப்பட உள்ளது. முக்கிய நிகழ்வான மாதாவின் தேர் பவனி செப்டம்பர்-7 ஆம் தேதி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.


Tags : Velankanni, Holy Wellness Mata, Peralaya, Annual Festival
× RELATED முதுமலை முகாமில் யானைகள் பூஜையுடன் விநாயகர் சதுர்த்தி விழா