×

நிலவை மேலும் நெருங்கியது சந்திரயான்-2

பெங்களூரு: சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டு நிலவை மிகவும் நெருக்கமாக சுற்றிவருகிறது. சந்திரயான்-2  விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக கடந்த  மாதம் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவை நோக்கிய இதன் பயணத்தில் 30  நாட்கள் முடிந்துள்ளது. பூமியின் நீள்வட்டபாதையில் சுற்றி வந்த  சந்திரயான், சிறிது, சிறிதாக விலகி பூமியின் வட்டப்பாதையில் இருந்து  கடந்தவாரம் வெளியேறியது. இந்த நிலையில் நேற்று சந்திரயான்-2 நிலவின்  வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. நிலவின் மிக அருகில் சென்றுள்ள  சந்திரயான்-2 கடிகார திசையில் சுற்றி வருகிறது. நேற்று காலை வெற்றிகரமாக  இதன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது. இதற்காக 20 நிமிடம் இஞ்சின்  இயக்கப்பட்டது. தற்போது நிலவின் நீள்வட்டபாதையில் சுற்றும் சந்திரயான் வரும் அடுத்து 28ம் தேதி வட்டப்பாதை குறைக்கப்பட்டு செப்.7ம் தேதி நிலவில்  தரையிறங்க உள்ளது.

Tags : Moon , Chandrayaan-2
× RELATED முல்லைப் பெரியாறு அணை வழக்கு...