×

திருப்பதியில் திருட்டு வழக்கில் சென்னையை சேர்ந்தவர் கைது: 9 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்

திருப்பதி: திருப்பதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து ₹9 லட்சம் மதிப்பிலான தங்கம் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பதி குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜ்மோகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குற்றச் சம்பவங்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது. அப்போது ராமானுஜ ஜங்ஷன் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சென்னை போரூர் பகுதியை சேர்ந்த பாசுவ ராஜு என்கிற ராஜு(41) என்பதும் திருப்பதி மற்றும் சித்தூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வீடுகள், நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் திருடியதும் தெரியவந்தது.

நகைகளை திருடிச்சென்று சென்னையில் பதுக்கி வைத்து, தற்போது நகையை விற்பனை செய்வதற்காக திருப்பதிக்கு வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 249 கிராம் தங்க நகைகளும், 3 கிலோ 525 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 9 லட்சத்து 12 ஆயிரத்து 675 ஆகும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tirupati, theft case, Chennai, arrest, jewelery confiscation
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...