சென்னை: தன் மீதான வருமான வரி வழக்கை எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கார்த்தி சிதம்பரம் மீதான் வருமான வரி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ரூ.1.35 கோடியை வரி ஏய்ப்பு செய்ததாக கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி மீது 2018ல் வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.