காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோயில் மூலவர் தரிசித்த பின் இன்று மாலை அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்படுவார் என காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். அத்திவரதர் வைபவம் சிறப்பாக நடக்க உதவிய காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை ஆட்சியர் தெரிவித்தார். இதுவரை எண்ணப்படத்தில் ரூ.7 கோடி வரை பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.