×

காஞ்சி கலெக்டரை கண்டித்து ஓய்வு பெற்ற காவலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் கோவை மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் நேற்று காஞ்சிபுரம் கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதில் கடந்த 9ம் தேதி காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் மாவட்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ், விஐபி பாஸ் இல்லாமல் பக்தர்களை உள்ளே அனுமதித்த பிரச்சனையில், மாவட்ட கலெக்டர் பொன்னையா இன்ஸ்பெக்டரை  ஒருமையில் திட்டியுள்ளார். கலெக்டரின் செயல் கண்டிக்க தக்கது என்றும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Condemn the Kanchi Collector Retired guards protest
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...