சென்னை: தமிழகம், கர்நாடகா, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வடமாநிலங்களில் படிப்படியாக மழை குறையும் என்றும் அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.