×

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலுக்கு இந்தியா தந்த பதிலடியில் 3 பாக். வீரர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக, பாகிஸ்தானால் ஊடுருவல்களை தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இந்திய இராணுவம் முற்றிலும் எச்சரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் பயங்கவாத தாக்குதல் உள்ளிட்ட எந்த அசம்பாவிதங்களும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய எல்லைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீர் எல்லைப்பகுதிகளான உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாக்., ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி தந்தது. இதில் பாக்., ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

Tags : Border, Pakistan Army, India, 3 Pak. Soldiers, casualties
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...