×

பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த கோவில்பட்டி குற்றப்பிரிவு ஆய்வாளர்: உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் இசக்கிமுத்து பாதுகாப்பு பணியில் இருந்தார்.

இவர் நேற்று இரவு கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பரலோகமாதா ஆலய விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக சகபோலீசார் அவரை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

பலியான இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்துக்கு சொந்த ஊர் தூத்துக்குடியாகும். இவருக்கு செல்வி(50) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் இசக்கி முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

Tags : Heart attack, Kovilpatti, Criminal Investigator, top police officers, tribute
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...