சென்னை: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருது வழங்கப்பட்டது. நெல்லையில் கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிக்கு முதல்வர் பழனிச்சாமி அதீத துணிவு விருது வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய தனியார் நிறுவனமான எவரெஸ்ட் நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டது.