×

ஆறுகாட்டுத்துறையில் நடுக்கடலில் மீனவர்கள் படகில் மீன்பிடி வலை அறுத்து கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

வேதாரண்யம்,: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் படகில் 5 லட்சம் மதிப்புள்ள வலையை இலங்கை கடற்கொள்ளையர் அறுத்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம்  வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த  மீனவர் பொன்னுத்துரை (40) என்பவரது பைபர் படகில் நடராஜன், ஆறுமுகம், சுப்பிரமணியன் ஆகியோர் கடந்த 13ம்தேதியும், மணியன்தீவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (52) என்பவரது  படகில் ஆறுமுகம் தியாகராஜன் ஆகியோர் கடந்த 12ம்தேதியும் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
 
இரு படகுகளை சேர்ந்தவர்களும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கடலில் மீன்பிடிக்க விரித்து வைத்திருந்த  வலைகளை அறுத்து எடுத்துகொண்டு சென்றுவிட்டனர். பொன்னுத்துரையின் 400 கிலோ வலை, முத்துகிருஷ்ணனின் 300 கிலோ வலைகளை அறுத்து எடுத்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ₹5 லட்சம்.  நேற்று காலை கரைக்கு வந்து சேர்ந்த  2 மீனவர்களும் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : River Department, Mediterranean, Fishermen,Sri Lankan
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...