×

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஊழியர் பலி

விருதுநகர்:  விருதுநகர் அருகே சிவகாசி சாலையில் மத்திய சேனையை ஒட்டிய முத்தலாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் 220 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை 6 மணிக்கு பட்டாசு ஆலையில் வேலை செய்வதற்காக 4 ஊழியர்கள் வந்துள்ளனர். அதில், மத்தியசேனையை சேர்ந்த மாயழகன் (45), வெடிமருந்து அறையில் உள்ள தூக்குமணி மருந்தை, மற்றொரு அறைக்கு கொண்டு செல்ல முயன்றார். அறையை திறந்து பெட்டியை இழுத்து சென்றபோது, அறை வெப்பமாக இருந்ததால் உராய்வு ஏற்பட்டு வெடிமருந்துகள் வெடித்து சிதறின. இதில் மாயழகன் உயிரிழந்தார்.

வெடி விபத்தில் ஒரு அறை முழுமையாகவும், 4 அறைகள் பகுதியாகவும் சேதமடைந்தன. விருதுநகர் தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தனர். போர்மேன்கள் கையாள வேண்டிய தூக்குமணி மருந்தை, ஊழியர் கையாண்டதாக கூறி, குத்தகை உரிமதாரர் கமல்ராஜ் உட்பட 4 பேர் மீது ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Employee killed,fireworks explosion,Virudhunagar
× RELATED வேலூர் மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ்...