சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனக்கு ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 3.627-க்கும், சவரன் ரூ.29,016-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரே வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 67 டாலர் அதிகரித்து 1529 டாலராக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.192 உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி ரூ.27,328க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் விலை இன்று ரூ.29ஆயிரத்தை கடந்ததுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.28,896 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பத்து நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்நது வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.3612-க்கு இன்று காலை விற்பனை செய்யப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் இன்று ஒரே நாளில் 19 டாலர் அதிகரித்து 1516 டாலராக இருந்துது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் அதிகரித்து ரூ.48.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.