×

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மின் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்கின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களின் படகை சேதப்படுத்தினர். படகில் இருந்த கிங்ஸ்டன், இன்னாசி, நெல்சன், வில்லான் உள்ளிட்ட 6 மீனவர்களையுன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் மீது எல்லைத்தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படவுளள்னர்.

Tags : Sri Lanka Navy arrests fishermen
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...