×

திருவிழா வெடி விபத்தில் 3 வயது குழந்தை பரிதாப பலி

திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த ஆளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் மணி. இவரது தங்கை கல்பனாவை கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ரமணிபுதூரை சேர்ந்த ராஜா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தம்பதிக்கு மனீஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை இருந்தது. கடந்த 10ம் தேதி ஆளூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி மனீஷை அவனது பெற்றோர் ஆளூர் கிராமத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கோயிலில் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. அப்போது மேலே சென்ற வெடியானது கீழே இறங்கி திண்ணையில் அமர்ந்திருந்த மனீஷின் தலையில் பட்டு வெடித்துச் சிதறியது. இதில் படுகாயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மனீஷ் (3)  உயிரிழந்தான்.  திருக்கோவிலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : festival exploded, A 3-year-old, child
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு