×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 11 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கொலை குற்றவாளிகள் உட்பட 11 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் வெங்கடேசன் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த தினேஷ் (22), ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (26), முரளிகிருஷ்ணன் (27), பண பாண்டி (26), பிரபாகரன் (25), சங்கர் (26) மற்றும் 3 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய தீவுத்திடல் மைதானம் பி.பிளாக்கை சேர்ந்த ஜான் (எ) ஆனந்தன் (28), தொடர் கஞ்சா விற்பனை ெசய்து வந்த கண்ணகி நகரை சேர்ந்த நந்தகுமார் (27), கோபாலபுரம் 3வது தெருவை சேர்ந்த ரூபன்ராஜ் (23), கொலை உட்பட 16 வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் சுப்புராய முதலியார் தெருவை சேர்ந்த ரகுகுமார் (38) மற்றும் தண்டையார்பேட்டை சிவாஜி நகர் 6வது தெருவை சேர்ந்த பாலமுருகன் (எ) அண்ணாமலை (23) ஆகிய 11 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்து சிறையில் அடைத்தனர்.


Tags : Gundas ,11 involved in a series,crimes
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...