சென்னை: வேலூரில் கதிர் ஆனந்துக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். பணபலம், அதிகார பலத்தை எதிர்கொண்டு வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வேலூர் மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் கிடைத்த வெற்றி முழுமையான வெற்றி என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.