×

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி கீழ்பவானி அணை பூங்கா மூடல்

சத்தியமங்கலம்: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக கீழ்பவானி அணை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது. பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, கொலம்பஸ், சிறுவர் ரயில் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு சாதனங்களும் உள்ளன.  அணை பூங்காவில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் தடுக்க பவானிசாகர் அணை பூங்காவை தற்காலிகமாக மூடுமாறு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இதையடுத்து  பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று மாலை முதல் அணை பூங்காவை மூடியுள்ளனர். அணை பூங்காவிற்கு பார்வையாளர்கள் யாரும் வரவேண்டாம் எனவும் தற்காலிகமாக அணை பூங்கா மூடப்பட்ட நிலையில் மீண்டும் மறு அறிவிப்பு வந்த பின் பூங்கா திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி கீழ்பவானி அணை பூங்கா மூடல் appeared first on Dinakaran.

Tags : Corona ,Lower Bhavani Dam Park ,Sathyamanalam ,Bawanisagar Dam ,Dinakaraan ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...