×

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!

சென்னை: தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். ராஜேஷ் லக்கானி, மதிவாணன், அமுதவல்லி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை  மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* வீட்டு வசதி மற்றும் புறநகர் மேம்பாட்டுத்துறை முதன்மை செய்யல்லாளராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டார்.
* சுற்றுலாத்துறை இயக்குநராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறை இயக்குநராக மதிவாணன் நியமனம் செய்யப்பட்டார்.

* சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக கார்த்திக்கேயன் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
* தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் மற்றும் சி.இ.ஓ.வாக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் சந்திரசேகர் சக்கமுரி நகர்-ஊரமைப்பு இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

Tags : Tamil Nadu, IAS officer, Transfer, Govt
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்