சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் ஆலைகளை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.