ஆலந்தூர்: போக்குவரத்து பிரிவு போலீஸ் எஸ்ஐஜெயன், கிண்டி ஹால்டா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார் அப்போது தனியார் ஒட்டல் முன் ஒரு கும்பல் நின்று தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டு இருந்தனர். எஸ்ஐ அங்கு சென்று ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு கும்பலில் 2 பேர் எஸ்ஐயின் சட்டை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து எஸ்ஐ ஜெயன் வாக்கி டாக்கி மூலம் தகவல் பரப்பியதும் கிண்டி போலீசார் அங்கு வந்து தகராறில் ஈடுப்பட்ட நங்கநல்லூரை சேர்ந்த சீனிகேஷ் (34), ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராஜ கண்ணன்(40) ஆகியோரை 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.