×

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு திட்டம் செயல்படுத்த கோரிக்கை

தங்கவயல்: தங்கவயல் நகரசபை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று நகரசபை தலைவருக்கு  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வக்கீல் எஸ்.தங்கராஜ் தங்கவயல் நகரசபை தலைவர் வி.முனிசாமியை நேரில் சந்தித்து கொடுத்த மனுவில், டாக்டர்  பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாளான வரும் 14ம் தேதி நகரசபை சார்பில் தங்கவயல் நீதிமன்ற வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு (ஐமாஸ் லைட்)  அமைக்க வேண்டும். தங்கவயல் நீதிமன்றத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்த வக்கீல்களுக்கு இலவசமாக லாப்டாப் வழங்க  வேண்டும். தங்கவயலில் நகர பகுதி மற்றும் சுரங்க குடியிருப்பு பகுதியில் வாழும் இளைஞர்கள, மாணவர்களின் நலனுக்காக டிஜிட்டல் நூலக வசதி  ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.  முதல் மற்றும் இரண்டாமாண்டு பியூசி, டிகிரி படிக்கும் மாணவர்களுக்கும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், கர்நாடக அரசு பணியாளர்  தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க கோச்சிங் சென்டர் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்….

The post அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு திட்டம் செயல்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ambetkar ,Gangavayal ,Municipal Council ,Ambedgarh ,Ambetgarh ,Dinakaran ,
× RELATED பேரூராட்சி இயக்குனர் ஆய்வு