×

2 நக்சல்கள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பெண் நக்சல் உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரில் தண்டேவாடா, பிஜப்பூர், பாஸ்டர், நாராயண்பூர், கொண்டகான், சுக்மா மற்றும் கான்கர் ஆகிய 7 மாவட்டங்களில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தியாகிகள் வாரமாக நக்சல்கள் கடைபிடிக்கின்றனர். இதனை முன்னிட்டு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் கொண்டா காவல் நிலையத்துக்கு உட்பட்ட கன்ஹாய்குடா கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில்  மாவட்ட ரிசர்வ் போலீசார், பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது நக்சல்களுடன் நடந்த சண்டையில் பெண் உட்பட இரண்டு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


Tags : 2, Naxals, shot dead
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...