சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிப்பதாவது: கொரோனா 2வது அலையால் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது. தற்போதைய சூழலில் தமிழக மக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், முதியோர்களையும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்றை சமாளிக்க தகுதியுள்ளவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்….
The post கொரோனா அதிகரித்து வருவதால் கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள்: கவர்னர் வேண்டுகோள் appeared first on Dinakaran.