×

பாரில் தகராறு: ஆயுதபடை போலீஸ்காரர் கைது

சென்னை: பாரில் தகராறு செய்த ஆயுதபடை போலீஸ்காரர் கைதானார். குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர்(26), டெல்லி 8வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். விடுமுறையில் வந்த பாஸ்கர், குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலம் அருகே உள்ள மதுபான பாரில் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது, போலீசாரை பாஸ்கர் தகாத வார்த்தையால் பேசினார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் பாஸ்கரை கைது செய்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : policeman , Barrel dispute, armed policeman arrested
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...