×

கோவை வங்கியில் கொள்ளை முயற்சி

கோவை: கோவை, கருமத்தம்பட்டி அருகே முத்துக்கவுண்டன்புதூரில் ஆந்திரா வங்கி செயல்பட்டு வருகிறது.  இரண்டு நாள் விடுமுறை முடிந்து நேற்று காலைமேலாளர் சந்தோஷ்குமார் வங்கியை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வங்கியில் உள்ள ஸ்டோர் ரூம் ஜன்னல் உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ்குமார் உள்ளே சென்று பார்த்த போது லாக்கர் உடைக்கப்படவில்லை. இதனால் அதிலிருந்த பணம், நகை தப்பியது. இருப்பினும் வங்கியில் இருந்த 2 ஹார்டு டிஸ்குகளை காணவில்லை. வங்கிக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் ஜன்னலை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து சந்தோஷ்குமார் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : robbery ,bank ,Coimbatore , Coimbatore bank, robbery attempt
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...