×

புதுச்சேரியில் கூடுதல் மின்கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு


புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டணம் செலுத்துவதில் பல்வேறு குளறுபடி நிலவுவதால் கூடுதல் மின்கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து 8.59 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பதிவுசெய்வதை விட கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் விசாரித்த போது அங்குள்ள அதிகாரிகள் கணினி பழுதாகிவிட்டது  என  காரணம் கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக முதல்வன் நாராயணசாமி எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஜூன் மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். அதுமட்டுமல்லாமல் மின்கட்டணம் கட்டுவதில் பல்வேறு குளறுபடி இருப்பதாகவும், அதுமட்டுமின்றி  மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். மேலும் இதற்கு உடனடி தீர்வு வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Puducherry ,public , Puducherry, Extra Electricity, Charge, Public, Criminal
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்