சிதம்பரம்: சிதம்பரம் அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாண்டிச்சேரியில் இருந்து காரைக்கால் சென்ற தனியார் பேருந்து சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமம் வழியாக சென்ற போது விபத்து போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.