×

ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது காவல் உதவி ஆய்வாளர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் பின்னால் மோதியதில் கீழே விழுந்த பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிழக்குடியை சேர்ந்த பொம்மையா என்பவர் பெருநாழி அருகே கோவில் நிகழ்ச்சி ஒன்றில் வீரமாட்சியுடன் பங்கேற்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இதையடுத்து வாலசுப்ரமணியம் அருகே சென்ற போது சாலை வளைவில் திடீரென திரும்பி உள்ளார். அப்போது பின்னால் வாலிநோக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்தர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இதை தொடர்ந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த வீரமாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து திரண்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்தியதாக உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து டி.எஸ்.பிக்கள் ராஜேஷ், முத்துராஜ் ஆகியோர் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்குள்ள மக்கள் ஆய்வாளர் வாகனத்தின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தியதாக உதவி ஆய்வாளர் ரவிச்சந்தர் மீது வழக்குப்பதிவு செய்த பின்னரே சாலை மறியல் கைவிடப்பட்டது.


Tags : collision ,Ramanathapuram , Ramanathapuram, Motorcycles, Accident, One Killed, Relatives, Road Pickup
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு